பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'80 வல்விக்கண்ணன் பதமில்லை பிரிவில்லை பிரிவால்.வையப் பட்டினிகள் ஒழியவில்லை! பின்ஏன் இந்த இதமில்லா மதப்பிரிவு எண்ணிப் பாரீர் எல்லாரும் மனிதமதம் உரிமை ஒன்றே! என்றெல்லாம் வியத்தகுநல் கருத்தைச் சொன்ன ஈரமிகு வள்ளலாரின் கொள்கை பற்றி நன்றி யுடன் இவ்வையம் சென்றி ருந்தால் நாசங்கள் நலிவேது? பூமித ன்னில் கொன்றொழிக்கும் கொடுமைகளும் ஏதாம்! ஐயா!' வள்ளலாரை வியந்து பெருங்கவிக்கோ பாடியுள்ள கவிதைகள் இனிமையானவை. உண்மைகளை உணர் வோட்டத்துடன் எடுத்துச் சொல்ப்வை. - மதம்சாதிப் பேயாட்டம் மமதை ஆட்டம் மார்க்கங்கள் விதவிதமாய்க் காட்டும் ஆட்டம் சதி ஆட்டம் பித்தலாட்டம் தான் நான் என்றே 'தன்னிட்டம் போலாடும் தடியாட்டங்கள் குதி ஆட்டம் போடுகின்ற நாளில் அன்பின் கோலாட்டம் தானாடி சமரசத்தின் 'மதி ஆட்டம் சன்மார்க்கம் காட்டி வென்ற வள்ளலாரைப் ப்ோலொருவர் வையம் உண்டோ? என்று வியந்து போற்றுகிறார். தொடர்ந்து வள்ளலாரின் சிறப்புகளைக் கூறி, செஞ்சொற்கவிதையாக சன்மார்க்க இனிமை பற்றிப் பாடுகிறார். 二 ・ ー ・ - "முக்கனியைப் பிழிந்த சுவைச் சாறோ எந்த முறை ஒழுகும் மனிதர்க்கும் இனிக்கும் ஆறோ? அக்கனியின் சாற்றில்பால் தேன்பருப்பு அறிசுவை நெய் தெங்கிளநீர் கல்ந்துண்டாலோ