பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வல்லிக்கண்ணன். கட்சிப் பெயராலே வெட்டித்தனத் திமிர் வீம்பாலே குட்டிச் சுவராகக் கெட்டுப் போவதில் பயனென்ன? பெட்டிப் பாம்பு போல் முட்டிப்போட்டுநீ தில்லியிலே மட்டியான பின் கிட்டே வந்து ஏன் கதைக்கிறாய்? என்று சாடுகிறார், தமிழரின் தற்கால நிலை கவிஞரின் கோபத்தை அதிகப்படுத்தக் கூடியதாகவேஇேருக்கிறது. விரிந்த சிந்தையும் வெற்றித் திருநோக்கும் புரிந்த பேரறமும் புடம்போட்ட கொள்கைகளும் ஞாலத்தில் ஓங்க் நனிபெற்ற நம்மினத்தார் ஏலத்துப் பொருளாகி எடுப்பார் கைப்பிள்ள்ையாகி தமிழ்ப் பண் பாட்டுத் தலைமையைத் தான்மறந்து இமிழ்கடல் சூழ்வையம் இறுமாப்பாய்ப்படை - - - யெடுத்த அவனவனுக்கேஆம் ஆள்தோதாய் ஆளாகி புவனத்தில் கேவலப் பொழுதுபோக்குக் கடிமையாய் மாற்றார் தமக்கு மருக்கொழுந்து வாடையாய் கூற்றுவன் போல் கொடியர் கொடுமைக்குக் காவலாய் வாயடங்கி வயிற்றை வளர்த்தால் போதுமெனும் மாயத்தில் கட்டுண்டார் மதிமறந்தார்! விதி. - * -- மறந்தார்! இச்சைத் துரோகியர்க்குப் ப்ாய்விரித்துப் முயந்து ஒடுங்கியிங்கே பிச்சைக்காரர் போல் பேயடிமை ஆகிவிட்டார் வந்தவனெல்லாம். தமிழன் வாகான் பிடரியிலே குந்தினான் அவனை குப்புறத் தள்ளுகின்ற