பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

காய்கள் மூன்று கிடந்தன. தட்டில் அரிசியை அள்ளிப் போட்டு அதன் மேற்பரப்பில் காய்கறிகளை எடுத்து வைத் துக்கொண்டு சமையல் செய்ய முன்னேற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கிள்ை அவள்.

அப்போது, 'அம்மா!' என்று அழைக்கும் குரல் கேட் டது. வெளியே வந்தாள் சாவித்திரி. அவள் மனம் அடித்துக் கொண்டது. அவள் எதிர்பார்த்திருந்தது போலவே, வீட்டின் சொந்தக்காரர் வாடகைக்கு வந்து நின்றிருந்தார். சுவரில் தொங்கிய காலண்டரில் பதினேந்து என்றிருந்த இலக்கங்கள் இரண்டும் அவளை அச்சுறுத் தின. -

ஐயா, இன்னிக்கு சாயந்திரத்துக்குள்ளே உங்களுக் குச் சேர வேண்டிய வாடகைப் பணத்தைக் கட்டிப்பிடு ருேம். தயவுசெஞ்சு இந்த ஒரு தடவை மட்டிலும் கோபித்துக் கொள்ளாதீங்க!’ என்று கெஞ்சிள்ை அவள்,

விட்டுக்காரனின் வெட்டரிவாள் மீசையில் கோபம் கொந்தளித்தது; நெற்றிப் பொட்டில் ஆத்திரம் கனிக் தது. ம்!...இன்னேக்குப் பொழுது படுறதுக்குள்ளாற வாடகை என் வீடு தேடி வரலேயான, என்கிட்டேயிருக் கிற உங்க அட்வான்ஸ் பணம் ஐம்பது ரூபாயிலே போன மாத வாடகையை எடுத்துக்கினு, பாக்கிப் பணம் இருபத் தஞ்சை கானே உங்களைத் தேடி வந்து வீசிப்பிடுவேன். இந்தப் பதினேஞ்சு நாள் வாடகை எனக்கு நஷ்டமானப் பாதகமில்லை. நீங்க வீட்டைக் காலி பண்ணிப்பிடுங்க அம்மா! அதுவே போதும். முனு பேருங்க வீட்டுக்கு அலையுருங்க!’ என்று நிர்த்தாட்சண்யத்துடன் எச்சரித் திார் அவர். - -

‘ஐயா, அப்படியெல்லாம் ஒண்னும் செஞ்சுடாதீங்க. பக்கத்துக் குடித்தனக்காரங்க எளனம் பண்ணுவாங்க.