பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

வெறிச்சோடிக் கிடந்தது மனம். கடந்த ஒரு வார மாகக் காலேயில் வீட்டை விட்டுச் சென்று மறுபடியும் இரவு ஒன்பது மணிக்குத் திரும்பிவந்தான் ராமசாமி. சிபாரிசு செய்வதுடன் தனக்கு வேண்டிய சாப்பாட்டு வசதிகளேயும் செய்து கொடுத்ததாயும் அவன் மனைவி யிடம் விளக்கம் கொடுத்தான். கல்லவர்கள் நாலு பேர் இருக்கக் கண்டு தானே மழை பெய்கிறது’ என்று அவள் எண்ணி ஆறுதல் அடைந்தாள்.

வீட்டு வாடகையின் கினேவு மீண்டது. அவளுடைய மனத்தின் அடிவாரத்திலிருந்து பயம் எரிமலையாகக் கனன்று வெடித்தது. இருபத்தஞ்சு ரூபாய் எப்படிக் கிடைக்கப் போறது?...’ என்று அவள் குழப்பம் அடைய வாளுள். வேலேயின்றிக் கழிந்த இடைவேளை காட் களுக்கு உதவிய தங்க வளையல்கள், ஒரு கல் மோதிரம், கழுத்துச் சங்கிலி ஆகியவற்றை எண்ணியபோது, அவளால் துக்கத்தைக் கட்டுபடுத்த இயலவில்லை. எப்ப டியும் இன்னிக்குப் போதுக்குள்ளே வாடகை கட்டியாக அனும்’ என்ற உறுதிப்பாடு புறப்பட்டது. மண்ணடியில் வாசம் செய்து வரும் சித்தியின் ஞாபகம் வந்தது. அங்கு சென்று கிலேயை காகுக்காக விளக்கிக் கடன்வாங்கி வர வேண்டுமெனத் தீர்மானம் செய்தாள் சாவித்திரி. கண் னடியில் முகத்தைப் பார்த்து, அம்பிகையின் பூஜை அறையைத் தரிசித்து, வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம் பின

             *             *                   *

மண்ணடி முனையில் ஏமாற்றம் கேர்டிட்டுக் காட்டிய முகத்தோடு வந்து கொண்டிருந்தாள் சாவித்திரி. வேகாத வெய்யிலில் தண்டையார்ப் பேட்டையிலிருந்து நடந்து தம்புச் செட்டித் தெருவுக்கு வந்தாள். தேடிப் போன தெய்வம் அவன்த் தேடி வரவேண்டாம்; கடைசிப்