பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

“ஒரு மாசம் கிட்டத்தட்ட ஆகியிருக்குங்க...!”

“வேலை?”

“பாட்டுப் புத்தகம் விப்பேன்...சாயா விப்பேன்... அப்புறம் பீடி சிகரெட்டு விப்பேனுங்க!”

“ஊம்”

“ஆமாங்க...!”

“ஒனக்குச் சம்பளம்?”

“இருபது ரூபாயுங்க!”

“இது கட்டுதாடா?”

“என்னமோங்க...சின்னப் பயலுக்குச் சின்னூண்டு வயிறுதானுங்களே!” தலையைச் சொறிந்து கொண்டான் சங்கிலி. பிள்ளைக்கோ தலை ‘விண்’ என்று தெரித்தது.

“சம்பளம் யாரு தாரது?”

“மானேசரு தருவாருங்க...அதாகப்பட்டது ஓங்க பணமுங்க!”

“பலேடா!”

பையனின் இளஞ்சிரிப்பு, பெரியவரின் இதழ்க்கடையில் வளர்ந்திருந்தது.

“உனக்கு நெசம் பேசிப் பழக்கமிருக்குதா?”

நெரம்ப இருக்குங்க...அதாலே தாங்க, முகப்பிலே தொங்கவிட்டிருக்கிற பொன் மொழிங்களைக் கண்டு எனக்குப் பயமே உண்டாகலேங்க. நானும் இங்கேயே தங்கவும் முடியுதுங்க!...

“பலேடா” என்று மெய்ம் மறந்து, மெய் நினைந்துருகிச் சிரித்தார், தியேட்டருக்குடையவர்.

“இங்கிட்டு வாடா!”

சங்கிலியின் காதுடன் காதாக ஏதோ ஓதினார் பிள்ளை. மறுகணம் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார்.