பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

"எசமான்!"

அடுத்த வினாடி செட்டியாரின் விரல்கள் கந்தப்பனின் கன்னங்களில் ஆழப் பதிந்தன. அவனே வெளியே தள்ளிக் கதவை மூடித்தாளிட்ட பெருமை சமையலறை அதிகாரியையே சாரும்!

கந்தப்பனின் உருவம் ராமலிங்கம் செட்டியாரின் மனக் கண்ணைவிட்டு விலகவே இல்லை. அதுபோலவே, அந்தச் சம்பவமும் அவர் நெஞ்சத்தை விட்டு அகலாமல், நினைவில் கிலேத்துப் புனர்ஜன்மம் எடுத்தது.

ஏறத்தாழப் பத்து மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அது.

அறந்தாங்கியில் சந்தைப்பேட்டை என்பது பர பரப்பு மிகுந்த பகுதி. அங்கேதான் ராமலிங்கம் செட்டியாரின் ஜவுளிக்கடை இருந்தது. ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஜவுளிகள் அங்கே அடைக்கலம் புகுந்திருந்தன. ஆயிரக் கணக்கில் பணம் புரண்டது. திருமுருகன் முன் நிற்க!’ என்கிற வாசகத்தை எழுதாமல் எந்த ரசீதிலும் அவர் பேணு ஒடமாட்டாது. “ஓம் முருகா!" என்ற உச்சரிப்பு அவரது இதழ்களில் சதா மணம் பரப்பி நிற்கும். வேளை கூடி வரும்போதுதானே தனலட்சுமியின் கருணையும் கிடைக்கிறது! வெறும் இரண்டாயிரம் ரூபாய் மூலதனத்தைக் கொண்டு ஆரம்பித்த "ரெடிமேட் கடை இன்று இவ்வளவு பெரிய அளவுக்கு வளர்ந்திருந்தது. இடையில் வந்துபோன ஆண்டுகள் ஆறே ஆறுதான்.

இப்படிப்பட்ட நிலையிலே ஒருநாள், செட்டியார்ப் பூட்டிப் பூட்டை ஆறுதரம் நன்றாக இழுத்துப் பார்த்துவிட்டுச் சர்வீக்கொத்தை இடுப்பில் செருகிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்ட தருணத்திலே, "ஐயா!"