பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150


என்னை நானே மறந்த ஒரு நினைவில்-நிலையில் ஒடினேன். மனம் அழுதது. பத்து மாதம் சுமந்த அந்த அன்புப் பொறுமையின் தியாக சீலத்துக்கு நான் எப்பிறப்பிலே நன்றிக்கடனே அடைக்கப் போகிறேன்?

ஒரே ஒருநாள் காய்ச்சல். அம்மாவுக்கு அதைப் பொறுக்க இயலவில்லை. போய்விட்டாள். ஆனால், நானும் அப்பாவும் அல்லும் பகலும் மனக் காய்ச்சலால் அவதிப்படுகிறோமே, இது அம்மாவுக்கு எங்கனம் தெரியும்? "ஐயோ சாரதம்!...என்னையும் உன் கண்மணியை யும் தவிக்கவிட்டுப்புட்டு, நீ மட்டும் நிம்மதியாய்ப்போயிட்டீயே சாரதம்?.....தெய்வமே, அடுக்குமா இது?...... மனசறிஞ்சு நான் ஒரு பாவமும் செய்யலேயே ஈஸ்வரா!... இனிமே நான் எப்பிடி உயிர்வாழப் போறேனே?.ஐயையோ!...” என்று கூக்குரலிட்டார் அப்பா.

பச்சைத் தண்ணீர் பல்லில் படாமல் இருந்த என்னிடம் தட்டுத் தடுமாறி நடந்துவந்த என் தந்தை எனக்குத் தேறுதல் சொன்னார். அம்மா, நீ மட்டும் இல்லாமலிருந்தாக்க, இந்நேரம் நான் செத்த இடமும் புல் முளைச்சுப் போயிருக்கும்!...ம், நீ வந்து ஒரு பிடி சாப்பிடும்மா. தவமிருந்து அவதரிச்ச மகள் .ே ரவை கண் கலங்கினாலும், நானும் உன் தாயாரும் உன் காலடியிலே பழியாக்கிடப்போம். இனி நான் தானே உனக்கு அம்மா-அப்பா எல்லாம்!....வாம்மா.!...’

என் இதயம் வெடித்துவிடாதா?."அம்மா.!...’

“அம்மா" என்ற குரல் என் நெற்றித் திட்டத்தைத் தொட்டது.

அப்பா வந்துவிட்டார்!

அம்மாவால் இந்தப்படத்தை உடைத்துக் கொண்டு வரமுடியாதா?...