பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

அமைதி கனிந்தது.

உறை ஒன்றைத் தந்தார்.

"அம்மா!

என்னை மன்னித்து விடு. என்னில் உயிர் வாழும் உன் அம்மாவைப் பிரித்து விடாதே தாயே!..உன்னைப் பிரிந்தும் நான் வாழச் சக்தியற்றவன். இன்றிரவு, நம்முடைய பாத்திரக் கடையை விலைபேசி முடிக்கப் போகிறேன். இனி எப்போதும் உன்னுடனையே இருப்பேன். ஆண்டவன் நல்ல வழி காட்டிவிட்டான். மாப்பிள்ளைக்கும் இதில் பெருமையுண்டு. நீலாட்சி நல்ல பெண். அவளைத் தகுந்த இடத்கில் வாழ வழி செய்கிறேன்.

இப்படிக்கு,
உன் அப்பா!

‘அப்பா!’ அப்பாவின் தோள்களில் சாய்ந்தேன்; கண்ணீர் ஓடியது. நிமிர்ந்தேன். விழிகளே விரித்தேன். அப்பாவின் உருவிலே அம்மாவையூம் தரிசித்தேன்! "அப்பா!... அம்மா"-புத்தொளியின் புத்துணர்வு படர்ந்தது. கண்களை விரித்து விழித்துப் பார்த்தேன். ஆமாம்; புது ஒளி! "கண்கட்டு" அகற்றப்பட்டுவிட்டதா? "கண்மயக்கம்" அகன்று விட்டதா?..

ஆஹா...!

ஈஸ்வரா...!