பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168


பிள்ளை! அடேயப்பா! நாளைக்கு எங்க சின்ன ஐயா கிட்ட கொத்துச்சாவி வந்தானதும், அப்பாலே எம்பாடு வேட்டைதான்! அப்புறம் நம்ம செவந்திக்குட்டிக்குக்கூட நல்ல அதிர்ஷ்டம்தான்! என்று மெய்மறந்து போய்விடுவாள் வேலாயி கொண்டவளின் பேச்சைக் கேட்க கேட்க, காத்தமுத்துவுக்குக் கூட வ. உ. சி. நகர், ராஜப்பா நகர், மேற்கு அலங்கம், கீழவாசல், மானம்புச் சாவடி என்று கால்கடுக்கக் சுற்றியலேயும் சோர்வில் ஒர் ஆறுதல் கனியவே செய்தது.

மூன்று மாசமாக இந்த நாடகம்!

தாரிணிதேவியார் வேலைக்காரியைக் கூப்பிடுததற்கு ஒரு 'காலிங் பெல் ' வாங்கி வைக்க வேண்டுமென்று விழைந்தாள். பின், என்னவாம்? கேவலம், ஒரு வேலைக் காரியை-'செர்வண்ட் மெய்டை' அழைக்கக்கூட இப்படித் தொண்டைத் தண்ணீரைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறதே?

கொல்லப்புறத்தில் தென்னங்கன்றின் நிழலில் குத்துக் காலிட்டுக் குந்தியவளாக, பாத்திரம் பண்டம் கழுவித் தேய்த்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தவள், எஜமானியின் ஒன்பவதாவது சிறுமூச்சுப் பெருங்குரலைக் கேட்டு ஓட்டமாக ஓடினாள். "அடியே...நீ என்னடி!” சரி...சரி வருகிற வெள்ளிக்கிழமை நம்ம ராஜாவுக்கு எங்க ராஜாவுக்குப் பிறந்த நாள் விழாவாக்கும்! வேலை நிரம்பக்கிடக்குது ஒடியாடி!’ என்றாள்.

பிறந்த நாளா? சின்ன முதலாளி பிறந்துதான் முனுவருசம் ஆகப்போகுதே! பிறந்த நாளுன்னா என்னவாம்?

எல்லாக் கேள்விகளையும் கேவலம் ஒரு வேலைக்காரி, பற்களில் நாவை இழைத்துக் கேட்டுவிட முடியுமா?