பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174


அப்பொழுது, சைக்கிளில் வந்து இறங்கினான் காத்த முத்து.

‘இந்தாங்கம்மா! அன்னிக்கு எம் பெண்சாதிக்கு நீங்க தந்த பேப்பர்க் கட்டுக்குள்ளாற இது இருந்திச்சு. இப்பத் தான் பார்த்தேனுங்க!’ என்று மூச்சு வாங்கச் சொல்லி நீட்டினான்.

காணாமற்போயிருந்த அந்தப் பிராமிசரி நோட்டு கிடைத்துவிட்டது.

குற்றவாளியான ராஜாவுக்கு எப்பொழுது பார்த்தாலும் சிரிப்புத்தான்!

தாரிணிதேவியாருக்கு உயிர் வந்தது. ரகசியமாக நூறு ரூபாய் கோட்டு ஒன்றை வேலைக்காரியிடம் நீட்டினாள். இந்தா வேலாயி! இதை என் இனமாக வச்சுக்க. உன் மகளின் பிறந்த நாளைக் கொண்டாடு என்னை மன்னிச்சிடு’ என்று வேண்டினாள்.

வேலாயி குதூகலம் எய்தினாள்; அம்மா, நீங்க நல்லா இருக்கோணும். எங்க மகளோட பிறந்த நாளைக்கொண் டாடுறத்துக்குப் பெரிய மனசு பண்ணி உத்தரவு தந்திங்களே, அதுவே போதுமுங்க! உங்க பணம் காசு வேனாமுங்க! உங்க அன்பு குறையாமல் எப்பவும் இருந்திருக்க, அதுவே போதுமுங்க! உங்க மாதிரி நடந்துகிடறதுக்கு அன்றாடங் காய்ச்சிகளான நாங்களும் ஆசைப்படுறது குத்தமுங்க தப்புங்க தலைக்கு வந்த ஆபத்து தப்பிப் போன விசயமே, எனக்கு ஆயிரம் ரெண்டாயிரம் பணம் கெடைச்சமாதிரி. அம்மாந்தூரம் செம்பு ஊறிக்கெடக்கு துங்க எம்மகளுக்கு ஆயுசு, மட்டும் பலமாக எழுதிப் போடும்படியா நீங்க சாமியை நெனச்சி ஆசீர்வாதம் பண்ணுங்க தாயே! அது போதும்’ என்றாள். சுடுசரம் விரிந்தது. கண்டாங்கிப் புடவைத் தலைப்பில் கனவுகளையும் முடிந்தாளோ?