பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178


உள்ளத்தே துளிர்த்திருந்த ஆசையை வார்த்தைகளாக்கிச் சொக்கும் புன்னகையுடன் கூறிய பார்வதியின் முகத்தில் அந்த ‘ஆனந்தக்கனவு’ நிழலாடியது.

ஆனந்தன் சிரித்தான்.

“பேஷ் பார்வதி. இப்போதே உன் பெண்ணுக்கு வரன் செட்டில் செய்துவிட்டாயே?...”

அன்று.....

‘கண்ணா’ என்று அலட்டியவண்ணம் துள்ளிக் குதித்து வந்தாள் ராதை. மெட்டியொலி கண்ணனின் உறக்கத்தைத் தட்டியெழுப்பியது போலும்! விழித்தெழுந்த அவன் அரைக்கணம் ராதையைப் அப்போது தான் புதிதாகப் பார்ப்பதுமாதிரி ஏற இறங்கப் பார்த்தான்.

“அத்தான், இந்நேரமா தூங்குவாங்க யாரும்? என்னைப் பாரு. எப்படி ஷோக்கா சட்டை போட்டு வங்துட்டேன் அதுக்குள்ளே, உனக்கு ஒரு வேடிக்கை காட்டட்டுமா? நம்ப விட்டுக்கு முன்னாலே பார்...” என்று குழைந்த குரலில் கூறிய ராதை, எதிரே சுட்டிக் காட்டினாள். இளஞ் சூரியனின் கதிரொளியில் அந்த மணல் வீடு அழகாக விளங்கியது. அதைப் பார்க்கப் பார்க்க ஏனோ கண்ணனின் கண்கள் சிவந்து வந்தன. முகம் வேறுபட்டது. அடுத்த வினாடி ‘விருட்’டென்று ஓடி அந்த மணல் வீட்டைக் காலால் உதைத்துச் சிதைத்தான் அவன். தன் செயலால் பாவம், அந்தச் சிறுமியின் பிஞ்சு மனமும் சிதைந்து போனதென்பதை கண்ணன் அறிய மாட்டான். ராதை துடித்துப் போனாள். அவனது விசித்திர மாற்றத்துக்குக் காரணம் எதுவும் புலப்படாமல் தவித்தது அப்பெண் உள்ளம். வாய்விட்டுப் புலம்பு