பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


எம்மேலே கோவிச்சுக்கப்படதாக்கும். நீ எனக்கு வீடு கட்ட வேணாம். கம்ப ரெண்டு பேருமே சேர்ந்து ஒண்ணா நம்பர் பங்களாவாக் கட்டிடலாம்...” என்றாள் ராதை குதூகலம் நிரம்பி வழிய.

இவ்விதம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும், சிரிப்பொலி கேட்டுத் திரும்பினர். ஆனந்தன், அவன் மனைவி, தங்கை மூவரும் நின்றார்கள்.

“உங்கள் ‘டூ’விற்கு மத்தியஸ்தம் இல்லாமலே ராசியாகி விட்டீர்களாக்கும். அதுதான் அழகு. ஊம்; காப்பியைச் சாப்பிட்டுவிட்டு அப்புறம் விளையாடுங்கள்...” காப்பி ‘செட்’ இரண்டை அவர்கள் முன் சமர்ப்பித்தாள் திருமதி ஆனந்தன்.

இரண்டு மணி மெயிலுக்குப் பட்டணம் புறப்பட வேண்டுமென்று தன் அம்மா கூறக் கேட்ட ராதை மிகவும் வேதனைப்பட்டுப் போனாள். பள்ளிக்கூடம் திறக்க இன்னும் நாலைந்து நாட்களே இருந்தன. ஆனாலும் வேறு ஏதோ அவசர காரியமாக உடனே புறப்பட்டு வரும்படி பார்வதிக்கு அவள் கணவனிடமிருந்து கடிதம் வந்திருந்தது.

கண்ணனின் காதுகளில் செய்தி எட்டியதும் அசந்து விட்டான். ஒரு நிமிஷம் கூட அவளைவிட்டுப் பிரியமாட்டாத அவன் எப்படி அடுத்த லீவு வரை ராதையைப் பிரிந்து ― அந்த ஆசை முகத்தைக் காணாமலிருக்க முடியும்? ராதை தன்னுடனேயே இருந்து படிக்கும் படி வேண்டினான். பார்வதிக்குக் குழந்தையைத் தனியே விட்டு வைக்க மனமில்லை.

“கண்ணா, அடுத்த மாசம் திருவிழாவிற்கு உன்னிடம் கொண்டு சேர்த்து விடுகிறேன். கடல் கடந்தா
ஆ 12