பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189


உம் மனசுக்குப் பிடிச்சிருந்தாக்க, அதுகளே வாங்கியாந்து காட்டு. செட்டிகாட்டுப் பக்கத்திலேருந்து நாணயமான ஆசாரி யாரோ வந்திருக்காராம். அவரை அழைச்சிட்டு வரச்சொல்லி, அவர்கிட்டக் காண்பிக்கலாம். உன் அப்பா இருந்து, உனக்கு வேணுமிங்கிறதைச் செஞ்சுபோட்டு அழகு பார்க்கக் கொடுத்துவைக்கலே. இதை கினேச்சாத் தான் ராத்துக்கம் பகல் தூக்கம் கொள்ளலே! ம்...பிடிச் சுப்போட்டவன் ஆட்டிப் படைக்கிருன். சரி அம்மா! நாளேக்கு நல்ல காள்தானும். நான் சொன்ன தாக்கலே மறந்துப்புடாதே”

உடன் தொடர்ந்த நாள் விடிந்தது.

தாய் வீட்டில் பீரோவிலிருந்த தன்னுடைய பழைய நகைகளேப் பெட்டியினின்றும் பிரித்தெடுத்தாள். நகையோடு நகையாக ‘அந்தத் தாலி’யும் வந்து சேர்ந்தது. அவ் வளவுதான், தன் உயிரையே யாரோ பிரித்தெடுத்தாற்போல உணரலாணுள் கல்யாணி அம்மாள். தன்னைத்தானே ஒருமுறை குனிந்து பார்த்துக் கொண்டாள். வெள்ளையுடை காட்சியளித்தது. காலச்சிமிழைப் பதமாகத் திறக்கக் கூடவில்லை. பதட்டம், ‘பொல, பொல’வென்று மணிகள் உதிர்ந்தன. கண்ணிர் மணிகளுக்கு ஒசை ஏது? உருவந்தானே உண்டு? உருவமொன்று தோன்றியது. அது அவள்புருஷனின் உருவம். சோமசேகரன் ‘ஜம்’மென்று இருந்தார். மாப்பிள்ளை அல்லவா? மனம் அறிந்து, மணம் முடித்தார்கள். கெட்டி மேள முழக்கத்தாடே திருப் பூட்டப்பட்டது. அவள் அவரது சொத்து ஆனால், காலப்பூ இதழ்கள் சிலவற்றை உதிர்த்துச் சிரித்தது. கோமதி பிறந்து சிரித்தாள்: பெற்றேர்கள் பேணிச் சிரித்தார்கள். முன் சிரிப்பு, பின் அழுகை என்பார்கள். அது கல்யாணி அம்மாள் வரை மெய்யேதானே?

இமை பிதுங்க,மனம் பிதுங்க, அந்தத் தாலியையே உறுத்துப் பார்த்தாள் அவள். மங்கலகாண்எனும் சிறப்புப்