பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

நாதத் தந்தி

வாஸந்திக்கு மூளை வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது. தொடர்ந்து எதையுமே அச்சமயம் அவளால் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. தூசு தட்டித் துடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வீணையை மீண்டும் ஒருமுறை நோக்கினாள். மருட்சி தோய்ந்த அவள் விழி 'வீச்சில் அடியுண்ட மானின் ஏக்கம் - வேதனை சுடர் விட்டது. ஜன்னல் கம்பிகளினூடே பாய்ந்து ஒளி பரப்பியிருந்த அந்தி வெயிலின் செங்கதிர்கள் வீணை மீது படித்திருந்தன. அக்காட்சி அவள் நைந்த மனதை ரம்பம்போல அறுத்தது. அந்த நாட்களில் தன் அக்காள் சுலோ வீணை வாசித்து, அத்தானை மகிழ்வுறச் செய்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நினைவுப்படுத்திப் பார்த்தாள் வாஸந்தி. நெடுமூச்சு வெடித்துக் கிளம்ப இமை வட்டங்களில் நீர்த்திவலைகள் வரம்பு கட்டின.

அன்று ஞாயிற்றுக்கிழமை. விடுமுறை நாள். மத்தியானம் உண்டு முடித்ததும் அமைதி கனிய உட்கார்ந்து, வம்பளந்து வீண்பொழுது கழிக்கத் திட்ட மிட்டிருந்தான் மூர்த்தி. அதற்கு, வாஸந்தியும் பூரண சம்மதம் கொடுத்திருந்தாள். ஆனால் யார் இதோ தம்பதிகளின் ஒட்டிய இரு உள்ளங்கள், ஏகோபித்துப் போட்டிருந்த ஏற்பாடு சடுதியில் நிலை குலைந்தது. மூர்த்தி முன்கூட்டியே தயாரித்து வைத்திருந்தவன் போல. விண்ணப்பம்

13