பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

சங்கிலி, ஜெயஸ்தம்பமென உயர்ந்து, வெற்றிக் கொடியின் காம்பீர்யத்துடன் நிலைநாட்டப்பட்ட உண்மையைப் போன்று அந்தரங்கசுத்தியுடன் நின்று, அந்த மனிதரையே இமை பாவாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதே அலட்சிய பாவனையுடன்!

"ம்...வாங்க... போவோம்!"

'தர்ம பத்தினியின் தோள்களில் அவர் அணையப் பெற்றவராக, வழி கடந்தார்.

எவனோ, "தூ ...!"என்று சத்தமிட்டுக் காறித் துப்பி மறைந்த உண்மை நடப்பைத் திருப்பிப் பார்க்கவும் மனத் துணிவு அற்று, தன் போக்கில் தன்னுடைய-தடத்தில் நடந்துகொண்டே இருந்தார் சகடயோகம்! *