பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198


ஒன்றைச் சமர்ப்பித்துக் கொண்டான் தன் இதயராணியிடம். பதியின் ஆசை வேண்டுகோள் வாஸந்தியை மனமுடையச் செய்து விட்டது போலும்! இல்லையென்றால் அவள் கண்கலங்கக் காரணம்....?

"வாஸந்தி, நானும் யோசித்து யோசித்துப் பார்த்து விட்டேன். எப்படியும் திரும்பவும் ஒரு தரம் உன் தமக்கை வாசிக்கும் அந்தத் "தந்தியிலெழுவது நாதம்" என்ற பாட்டை வீணையில் இசைத்துக் கேட்க வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை என்னைப் பைத்தியமாக ஆட்டி வைக்கின்றது. ஆனால் அந்தப் பாட்டை சுலோ மாதிரி உன் ஒருத்தியாலேயே அத்துணை திறம்பட வாசிக்க முடியும். வாஸந்தி, மறுக்க மாட்டாயே?" என்று கேட்டுக் கொண்டான் மூர்த்தி. இயல்பான அவனது ஆணையில் - அல்ல, விண்ணப்பத்தில் கம்பீரம் ஒடுங்கி ஒலித்தது. தலையை உயர்த்திப் பார்த்தாள் கணவனை. உடனே தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். புருஷன் கொண்ட, மனைவியிடம் வேண்டுவதா என்ற இரண்டுங் கெட்டான் நிலையில் "ஆகட்டும்," என்று ஒப்புக் கொண்டாள். மூர்த்திக்கு அப்பொழுது ஆகாயத்தில் 'ஜிவ்'வென்று பறப்பது போன்ற உணர்ச்சி உடலெங்கும் ஊடுருவிப் பாய்ந்தது.



அட்வகேட் அனந்தராமனின் பெயருக்கும் புகழுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினர் அவரது இரு புதல்விகளும். மூத்தவள் சுலோ; இளையவள் வாஸந்தி. ஒரே கிளையில் பூத்த இரு மலர்கள் அவர்கள். அழகு அரியணை வகிக்கும் கனவுப் பதுமைகள் சுலோவும் வாஸந்தியும். வளர்ச்சியும் கவர்ச்சியும் அவர்களுக்குப் பருவ எல்லையை நிர்ணயித்தது. சுலோவிற்கு வாஸந்தியைவிட ஒருவயது தான் அதிகம் என்றாலும், முதலில் சுலோவின் கல்யா-