பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201


பிம்பமெனத் தோற்றமளித்த வாஸந்திக்கு முதல் மனேவியின் ஸ்தானம் அளிக்கப்பட்டது; ஆதரிசவாழ்வின் தொடக்கம் அழகாக, அற்புதமாக இணைந்தது; அமைந்தது.

சுலோவைப்பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் தினமும் வாசிக்கும் வீணேயின் ஞாபகமும் தொடர்ந்தே வரும். அப்போதெல்லாம் வாஸந்தி அந்த வீணேயைக் கண்ணுல் காணக்கூடாதென்று மறைத்து வைத்துவிடு வாள். மேலும் நீண்ட நாட்களாக வீணையைக் குறித்த பேச்சுக்கே அத்தம்பதிகளிடையே சக்தர்ப்பம் எழவும் இல்லை. ஒருவேளை தன் அத்தான் என்றாகிலும் வீணேயை மீட்டி வாசிக்கும்படி கேட்க நேர்ந்தால் என்ன ஆகும் என்று மட்டும் மனத்தில் பலமுறை சம்சயப்பட்டதுண்டு. பொங்கிக் குமுறும் துக்கத்தை மாற்றிவிட வகை இது என்பதாக ஆராய்ந்தும் இருக்கிருள் வாஸந்தி. அவ்வளவு பாசம் தமக்கை மீது. ஆனால் வாஸந்தியின் பயம் முடிவில் கிஜமாக நிகழத்தான் செய்தது. ஒருநாள் வினையை ஒரே ஒருமுறை வாசிக்கவேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டான் மூர்த்தி.

விழிக்கோடியில் உருப்பெற்றுக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு நெற்றியில் விழுந்து புரண்டு விளையாடும் கேசத்தை ஒதுக்கிக்கொண்டு மெல்ல எழுங்தாள் வாஸந்தி. பார்வையில் ஏக்கம் வலை பின்ன தலையை கிமிர்த்தி சுவரில் மாட்டியிருந்த சுலோவின் போட்டோவை ஒரு கணம் நோக்கிய பின் வீணே சகிதம் கீழே அமர்ந்தாள். எதிரேயிருந்த காற்காலியில் மூர்த்தி வீற்றிருந்தாள். இறந்துபோன சுலோவே உயிர்பெற்று வந்து கான மிழைக்கப் போவதாக மூர்த்திக்கு எண்ணம் ஓடியது. உடம்பு புல்லரித்தது. வாஸந்தி முகத்தில் புன்னகையை வருவித்துக் கொண்டாள்!