பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


“ஸ்ரீ சுந்தரம்!

குடும்பத் தகராறைப் பெரிது பண்ணி ஆடிய உங்கள் தகப்பனாருடன் சேர்ந்துகொண்டு நீங்களும் ஆடினீர்கள்; என்னை ஏமாற்றினீர்கள். ஆனால், ஆண்டவன் உங்களை இப்பொழுது பழிவாங்கிவிட்டான், பார்த்தீர்களா? உங்கள் பேரில் நான் வைத்திருந்த காதலுக்கு அடையாளமாக, நான் பரிசளித்த என்னுடைய உருவம் பதித்த கணையாழி இனியும் உங்கள் வசம் இருப்பது தப்பு. எனவே, உடனடியாகத் தபாலில் அனுப்பவும்.

இப்படிக்கு,
-தங்கம்மா.

அந்தப் பெரிய பங்களாவை தூரத்தில் நின்று பார்த்துச் செல்லும்போதே, பார்வதிக்கு உடம்பு கூனிக் குறுகியது. பங்களாவில் பிறந்த பையன் குமார், அவனுக்கு அவள் ஆசிரியை. பையன் சுட்டி! ‘குறைந்த பட்சம் பார்த்தால்கூட ரூபாய் நானூறு வேண்டும். எண்பது தொண்ணுாறு வாங்கும் என்னை ஒரு பொருட்டாக நம்பிக் கடன் தருவார்களா?...இப்போது கொடுத்தால் வட்டிவாசி சேர்த்து அடுத்த ஆறாம் மாசத்திலே கடனை அடைத்து விடலாம். அத்தானுக்கு வரவேண்டிய ‘பிராவிட்ண்ட் பண்ட்’ பணமும் கைக்குக் கிட்டிவிடும்...!’

அலைகடல் ஓய்வதில்ல; உறங்குவதில்லை!

இந்த மனக்கடலும் அப்படியேதான்!

காலை இளம்பரிதியின் வெம்மை சூடு பயிலத் துடித்துக்கொண்டிருந்தது.

நெஞ்சை உறுத்திய கடிதத்தை முகத்திற்கு நேர்முகமாகப் பிடித்தான். கண்கள் மீண்டும் அக்கடித வரிகளிலே நெளித்தது.