பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


“இன்னிக்கு வெள்ளிக் கிளமையாச்சே!”

“அதான் தெரிஞ்ச சங்கதியாச்சே!”

“அது சரி; இன்னொரு தாக்கல், அதான், ஒங்க தம்பி ஆட்டுச் சேதி!”―விழுங்கினாள்; மிடறு இறக்கினாள்.முகதலைவைக் கொய்து அழகுபார்த்து,அழகு காட்டினாள். முகச்சுருக்கங்களின் சருக்கம் விரிந்தது.

“ஓ, அதுவா?”― திண்டை ஒரு நிலைப்படுத்திச் சாய்த்து வைத்துக்கொண்டார். சுவரை ஒட்டித் தலையணையை இழுத்து நகர்த்தியபடி, சாய்ந்து கெர்ண்டார். கோடை இப்படியா ஈரக்கசிவை மேனியில் ஊறச் செய்யும்? சே! “ஆமா, தம்பி ஒன் இஷ்டப்படியே ஒப்புக் கிட்டானா? அவன் சம்சாரம் ― அந்தப் புள்ளேயும் மனசு இசைஞ்சுருச்சுதா? எல்லாமே ஈசன் செயல்தானாக்கும்!”

“ஆமாங்க. எல்லாரும் சம்மதிச்சாச்சு!”

மறுபடி, அண்ணாமலை இமைகளை மூடினார். கொண்டல்மணிவண்ணனின் உருவில் நின்ற இராமமூர்த்தியின் சேதுபக்தன தரிசனக் காட்சிகளும் சேதுஸ்கான முக்குளிப்பு நிகழ்வுகளும் சலனப்படங்களாயின. மனச் சலனமும் படம் காட்டிற்று. எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்! ஓர் அரசமரத்தை பாக்கி வைத்தாளா அவள்?

கன்றின் குரல் கனிந்து வந்தது. வள்ளியம்மை ஓடினாள். இரட்டை நாடிச் சரீரம் துயருற்றது. கொட்டடியில் கன்றைக் கட்டி, புல் தழைகளை உதறிப் போட்டுவிட்டுத் திரும்பினாள்.

“எங்கே அந்த மூக்கன் இன்னமா மேய்ச்சலை விட்டுத் திரும்பலே?” என்று வினவினார்.

“வார சமயந்தான்! அது சரி. நல்ல நாளு ஒண்ணு பார்க்க வேணும்னாங்க கொழுந்தன்காரக. சிதம்பர விடுதி