பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


“பூவிழி!” அவனுடைய காமகோக்கு அவளுடைய துய அழகில் ஊர வேளை பார்த்தது.

யாரோ துஷ்யக்த மகராஜா கந்தர்வ மனம் புரிந்த சகுக்தலையை முனி சாபத்தால் மறந்தாராமே உண்மையா?

அப்பொழுது அவள் அவனது கரங்களைப் பற்றினாள். அவள் மேகத் தட்டொன்றில் சாய்ந்தான். அவளும் சாய்ந்தாள். நிலவுக் குழந்தை கண்களைப் பொத்திக் கொண்ட நேரத்தில் எரிமலை வெடித்தது.

“ஐயோ, அத்தான்!”

ஹஹ்ஹஹ்ஹா!

இளந்தென்றல்:

“அத்தான்...அத்தான்!”

பொன்னியின் அந்தத் துயரக் குரல் பொன்னனுக்கு எப்படிக் கேட்கும்?― பாவம், இந்தக் கன்னிப்புறா வைத்தான் புவனநாதனின் இதயச் சிறை கம்பிகளைக் காட்டி எண்ணிக்கையைக் கணக்கெடுக்கச் சொல்லுகிறதே!...

பூந்தென்றல் நான்; என் நெஞ்சம் சூறாவளியாகச் சுழல்கிறது. நான் துயரருகிறேன்; வேறென்ன செய்வேன்?... கூடுவிட்டுக் கூடு பாயவாவது தெரிந்திருந்தால், பொன்னிக்கு விடுதலை அளித்திருக்கமாட்டேனா?...

“மாமன் மகளே!”

“யார் நீங்கள்?”

“உன் அத்தான்!”

“நான்!”
ஆ 5