பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72


“ஆ....ஐயோ !... தீ பரவி வீட்டதே!... ஐயோ!... பொன்னி!"

"ஐயா, ஓடுங்கள் இனி தீயைக் கட்டுப்படுத்திவிடுகிறேன்!..."

“வேண்டாம்... தீ வளரட்டும்; பரவட்டும் தீ!...என் காதலுடன் என் ஆசையும் தீக்கிரையாகட்டும்!... இனி நான் மறுபிறவி எடுக்கவே வேண்டாம்!...என்னை மன் னித்து விடு!"

கடவுளே!

ரதி-மன்மதன் காரியாலயம் :

“ஹல்லோ : நான் தான் ...டெலிபோன் பேசுகிறது. உங்கள் அன்பு பிராட்டியார் திருமதி ரதி தேவியார் அவர்கள் உங்களிடம் முக்கியமான இச்செய்தியைத் தெரிவிக்கச் சொன்னார்கள்; நீங்கள் உங்கள் நாயகியுடன் போட்டி. நடத்தினீர்களாம்: பொன்னியின் கற்பின் திறன் தான் கடைசியில் வென்றுவிட்டதாம்... பொன்னனின் சபல சித்தம் நல்ல பாடம் கற்றுக்கொண்டதாம்... கதையின் கதை முழுவதையும் நீங்கள் அறிவீர்களானாலும், அவர்கள் வாயால் தன் வெற்றியைச் சொல்லவேண்டுமென்று காத் திருக்கிறார்களாம்! இன்னொன்று; பொன்னனும் பொன்னியும் பூலோகத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்!... வணக்கம்...!"