பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


கூடமே சதமென்று தவம் கிடந்தது அவள் தாய் மனம். 'ஒரு பக்கம் என் புருஷன் சாகப் பிழைக்கக் கிடக்கிறார். குணமடைந்து வந்த நோய் திரும்பியிருச்சிதே!... இன்னொரு பக்கம் எங்க மாப்பிள்ளை உயிருக்கு மன்றாடிக் கிட்டுக் கிடக்கிறாங்க, என் தாலியும் என் மகள் தாலியும் சோதனைக் கூடத்திலே ஊசலாடிக்கிட்டு இருக்கு!.. இந்த வேத விதியை யார்க்கிட்டே போய் நான் அழுவேன்? எனையாளும் மஹேஸ்வரியே!..அம்மா "அகிலாண்டேஸ்வரியே!...எங்க ரெண்டுப் பேர் தாலி பாக்யக்தையும் கட்டிக் காத்து தா அம்மா!..."

ஊதுவத்தியின் சுகந்தம் புகைச்சுருள் வடிவமாக வெளியேறிக் கொண்டிருந்தது. ஊதுவர்த்திக் குழலின் பாதத்தடியில் சாம்பல் துகள்கள் பரவியிருந்தன.

அகிலாண்டம் திரும்பினாள். கமலாட்சி கை தொழுத வண்ணம் கிடந்தாள். வாய்விட்டுச் செருமினாள். மாப்பிள்ளையைத் தாக்கி வந்து கிடத்திய நேரத்தில் கண் மலர்ந்த ராமலிங்கம், "ஐயையோ, மாப்பிள்ளை” என்று கூச்சல்போட்டு மயக்கமுற்ற சம்பவம் அவளுள் கண் கட்டுவித்தை காட்டியதோ?

அந்தப் படத்தில் அவள் பார்வை ஒன்றியது. 'எம் பிரானின் தாள்களில் அடைக்கலம் புகுந்த காரணத்தால் வந்த காலன் தன் ஆருயிரை 'வவ்விய ' கோலம் இருந்தது. இனம் புரியாத-ஆனால் மகத்தானதொரு சாந்தம் கெஞ்சில் குடிகொண்டிருப்பதை மட்டும் அவளால் அனுமானம் செய்துகொள்ள முடிந்தது.

தூளியில் தூங்கியது குழந்தை .

குமார் தூளியின் தாம்புக் கயிற்றைப் பிடித்து ஆட்டிக்கொண்டேயிருந்தான்.