பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

.

பாய்ந்தாள் அவள் புத்திரி. அகிலாண்டம் தன் கணவவரைப் படுக்கையில் கிடத்திவிட்டு விரைந்தாள்.

டாக்டர் நாடி பார்த்தார். ஊசி போட்டார். மருந்து கொடுத்தார்.

அடுத்த ஐந்தாவது நிமிஷம், மாடிப்படிகளில் யாரோ உருண்டுவிழும் அரவம் கேட்டது.

“ஐயையோ!...அத்தான்!”

அலறிக் கதறினாள் அகிலாண்டம்.

‘அப்பா!...அப்பா!’

கமலாட்சி துடித்தாள்; குமார் புரண்டான்!

அகிலாண்டம் வைத்த கண் வாங்காமல் டாக்டரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஆண்டவனே!...என்தாலியைக் காப்பாற்றித்தா!...' என்று அகிலாண்டத்தின் உள்மனம் வேண்டியது.

ரத்தத் திவலைகளுக்கு மத்தியில் கிடந்த ராமலிங்கம் கண்களை மூடிமூடித் திறந்தார். அவரது உதடுகள் ‘மாப்பிள்ளே ...மாப்பிள்ளே!...’ என்று முணுமுணுத்தன.

‘என் புருஷன் பிழைச்சிட்டாங்க!...

அகிலாண்டம் தன் கணவரை அண்டினாள்.

அப்போது;

“ஐயோ அப்பா!...அம்மா!...என்னே ஏமாத்திட்டாங்களே என் அத்தான்!...” என்று கூக்குரல் எழுப்பினாள் கமலாட்சி,