பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தி குன்றக்குடி அடிகளார்

முறைகளுக்கேற்பப் பழக்கங்கள் அமைந்திருந்தன. வழக்கங்கள் அமைந்திருந்தன. ஆயினும் அவர்களுக்குள் அற்புதமான பொதுமை நிலவியிருந்தது. அவர்களுக்கிடை யில் பிரிவினை இல்லை; பிரிவினை வகைப்பட்ட பகைமை இல்லை. பல்வேறு குலப் பிரிவினரும் தத்தம் குல மரபுகளுக்கேற்ப அவரவர் தத்தம் தொழில்களை இயற்றி வந்தனர். சமுதாயம் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. நம்பிக்கையும் நல்லெண்ணமும் யாண்டும் நிலவியிருந்தன. குலப்பிரிவினைகள் உறவுக்கும் உடனிருந்து உண்ணுதலுக்கும் தடையாக இருந்ததில்லை. ஏன்? திருமணத்திற்குக்கூடத் தடையாக இருந்ததில்லை. ஆதிசைவ குலத்திற் பிறந்த ஆரூரர், உருத்திரகணிகையர் குலத்தைச் சார்ந்த பரவையாரை மணக்கின்றார்; வேளாளர் குலத்தைச் சார்ந்த சங்கிலியாரை மணக்கின்றார். அந்தண குலத்தைச் சார்ந்த அப்பூதியடிகள். திருநாவுக்கரசரை ஞானாசிரியராக ஏற்றுக் கொள்கின்றார். ஆதி திராவிடர் வகுப்பினைச் சார்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞான சம்பந்தருக்கு யாழ் வாசிக்கின்றார். அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருநீலநக்க நாயனாரின் வேள்விச் சாலையில் தங்கியிருக்கின்றார்.

"நின்ற அன்பரை நீலகண்டப் பெரும்பாணர்க்கு இன்று தங்கஒர் இடங்கொடுத்தருளுவீர் என்ன நன்று மின் புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச் சென்று மற்றவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்”

என்பது திருத்தொண்டர் புராணம்.

நற்றமிழ் ஆரூரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் உற்ற தோழராக விளங்குகின்றனர். அப்பரடிகளும் திருஞான சம்பந்தரும் முருக நாயனாரும் உடனிருந்து உண்டு பயின்று வாழ்கின்றனர். திருப்புகலூர்த் திருக்கோயில் வளாகத்திற்