பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தி குன்றக்குடி அடிகளார்

நெறிமுறை. இதனை "தீக்கை பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் திருக்கோயில்களில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற வழிபாட்டுக்குரியவர்கள்" என்று யாழ்ப் பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் சைவ வினாவிடையில்

கூறியுள்ளமை அறிக.

திருவிழிமிழலைத் திருக்கோயிலில் "செந்தமிழர்கள் மறை நாவலர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அர்ச்சனைகள் செய்தனர்' என்று திருஞான சம்பந்தர் தேவாரம் கூறுகிறது.

திருப்பழுவூர்த் தேவாரத்தில் மலையாளிகள் கூட வந்து வழிப்பட்டதாகத்" திருஞான சம்பந்தர் அருளிச் செய்துள் бттff.

அப்பரடிகள் திருவையாற்றுப் பதிகத்தில் "திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட அடியார்கள், புனலும் பூவும் சுமந்துகொண்டு ஒருவர் பின் ஒருவராகச் சென்று புகுந்ததையும் அவர்கள் பின்னே வந்த ஒழுங்கு வரிசையில் தாமும் செல்வதையும் குறிப்பிட்டு அருளிச் செய்துள்ளார்."

ஆதலால், திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறை வனைத் தகுதியுடைய அடியார்கள் அனைவரும் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொண்டமையை அறியலாம்.

அடுத்து, சேக்கிழார் அருளிச் செய்த பெரிய புராணமும் இந்த உண்மையை உணர்த்துகிறது. திருச்சாத்த மங்கையில் வாழ்ந்த திருநீலநக்கநாயனார் என்ற மறையவர் குலத்துப் பெரியவர், நாள்தோறும் தமது மனைவியுடன்