பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த ஞாயிறு எங்கே பார்த்தாலும் ஒரே இருள். இன்ன்து சிறந்தது, இன்னது அல்லாதது என்ற வேறுபாடே தெரியாத மருள் மண்டிக்கிடந்தது. உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகிக் கிடந்தன. உணர்வு இல்லாத உலகத்தில் உண்மை மனி தனக் காண முடியுமா? நாலு கால் விலங்கோடே மனித னும் இரண்டு கால் விலங்காக உலவின்ை. ஆடையாபரணம் புனேந்து சுவையுணவு உண்டு மொழி பேசி வாழ்ந்தான்; ஆணுலும் மனிதனே மனிதனக்கும் அறிவு அவனிடம் மருங் துக்கும் இல்லையாயிற்று. - . . . . . . . விலங்கினங்கள் ஒன்ருேடு ஒன்று பகைத்துக் துகைத் துக் கொலே புரிவது. இயல்பு. இந்தக் கொலேயே திேயாக நடப்பது காட்டு வாழ்க்கை. மனித சாதியும் ஒருவரை ஒருவர் நலிவுறுத்தும் செய்கையில் இன்பங் கண்டது. இவ்வொரு மனிதனுடைய உள்ளமும் கொந்தளிப்பு மிக்க பெருங் காடாக இருந்தது. காமம், கோபம், லோபம், மோகம், மதம், பகையுணர்வு என்ற ஆறு கொடிய விலங் கினங்கள் அந்தக் காட்டிலே குலவி ஊளையிட்டுக் குழப்பி வந்தன. அதன் விகளவாக மனிதனுடைய கினைப்பு, பேச்சு, செயல் அத்தனையிலும் விலங்கு மணம் வீசின. அயலானேக் கெடுக்கும் எண்ணம், பிறர் கெஞ்சைப் புண்படுத்தும் வெய்ய உரை, பிற உயிருக்குத் தீங்கை விளைவிக்கும் செயல் ஆகியவையே மனிதனுடைய வெளியீடாக இருக்தன். பிறருடைய நலத்தைப்பற்றி எண்ண அவனுக்கு உள்ளம் இல்லை. பிறர் உரையைக் கேட்க அவனுக்குக் காது. இல்லை. பிறர் கலம் காண அவன் கண் சகிக்கவில்லை. பிறருக்கு இன் உரை கூற அவன் கா எழுவதில்லை. . . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/122&oldid=744369" இலிருந்து மீள்விக்கப்பட்டது