பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. புத்த ஞ்ாயிறு 123 சங்கத்தையும், தர்மத்தையும் வணங்கிச் சரண் புகுந்தான் அவ் வணிகன். - ". சில காலம் கழிந்தது. வணிகன் நல்ல பக்குவத்தை அடைந்தான். அப்போது தன் காட்டில் உள்ள மக்களே யும் கல்வழிப்படுத்தவேண்டும் என்ற கருணை அவன் உள்ளத்தே சுரங்தது. அந்த விருப்பத்தைப் புத்த பகவா னிடம் விண்ணப்பித்துக்கொண்டான். . . . புத்த தேவன் புன்னகை பூத்தான். பிறரை கன் னெறிப்படுத்த எண்ணுபவன் தயையின் உருவமாக கிற்க வேண்டும். பகையும் ஹிம்ஸையும் அணுவளவும் புகாத உள்ளம் படைத்திருக்கவேண்டும். ஆகவே, அந்த இயல்புகளே அவன் கொண்டவன என்று அறியும் பொருட்டு அந்த ஞானச் செம்மல் அவனிடம் சில கேள்வி களேக் கேட்கலானன். "அங்கே போய்யாருக்குத் தர்மோபதேசம் செய்யப் போகிருய்?" என்று புத்த தேவன் வினவினன். 'பெருமானே, முதலில் என் சுற்றத்தார்களுக்கு அறம் உரைத்து, அவர்களே கல்வழிப்படுத்த முயல்வேன்" என்ருன் வணிகன். - அங்குள்ளார் யாவரும் கயவரென்றும், முரடரென் றும் சொல்லியிருக்கிருயே. இப்போது உன்னேக் கண்டு. அவர்கள் பரிகாசம் செய்யமாட்டார்களா? நீ பேசத் தொடங்குமுன் உன்னை காக்கில் நரம்பின்றி வைவார்களே! அப்போது என்ன செய்வாய்?" "தர்மத்தை வண்ங்கி, மெளனம் சாதிப்பேன். வைவாருக்கு எதிர் வைவதைச் செய்யேன்." "அது சரி. அவர்கள் மேலும் உன்னே அடிப்பார் களானல் என்ன செய்வாய்?" என்று மீண்டும் கேட்டான் புத்தர் பிரான். - • . . . - - . . . . . . . . . ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/125&oldid=744372" இலிருந்து மீள்விக்கப்பட்டது