பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 79



பூமியின் மேற்பரப்பு உருண்டையா தட்டையா என்பதை மனிதன் பூமிக்கு வெளியே சென்று பார்த்து வரம்பு கட்ட வேண்டியதில்லை. தினசரி நிகழ்ச்சிகளிலிருந்தும் இந்த உண்மையை நம்மால் அறிந்துகொள்ள முடியும். எனவே, உருண்டையான பூமியின் மேல் யூக்ளிட் என்ற விஞ்ஞானியின் ஜியாமெண்டரி உண்மைகள் பயனற்றவையாகின்றன என்றார் ஐன்ஸ்டைன்.

அதுமட்டுமல்ல, பூமி உருண்டையானது எனது கணித, அனுபவ நிகழ்ச்சிகளால் எவ்வாறு அறிந்து கொள்ளப்பட்டதோ, அதேவகையில், வான சாஸ்திர உண்மைகளின் வாயிலாக தீர்மானித்து, இந்த உலகமே உருண்டை வடிவமானது என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மிக அரும் பாடுபட்டு, யூக்ளிட் விதியை தவறு என்று ஐன்ஸ்டைன் நிரூபித்துக் காட்டினார்.

எனவே, ஐன்ஸ்டைனுடைய விஞ்ஞான சித்தாந்தப்படி இந்த உலகம் நியூட்டன் கண்ட எல்லையற்ற உலகம் அல்ல; யூக்ளிட் ஜியாமெண்டரி கூறும் தட்டையான உலகமும் அல்ல, உலகம் உருண்டைமானதோர் எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது என்பதை மெய்ப்பித்தவர் மேதை ஐன்ஸ்டைன் என்றால் மிகையாகா.

இவ்வாறு மேதை ஐன்ஸ்டைன் தொட்ட அறிவியல் கண்டுபிடிப்பு ஆய்வுகள் எல்லாம். இன்து வரை உலகத்துக் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.

டாக்டர் ஐன்ஸ்டைனின் விஞ்ஞான ஆராய்ச்சிகள் உலகின் கவனத்தையே கவர்ந்து விட்டன. 1938-ம் ஆண்டு வரையில் டாக்டர் ஐன்ஸ்டைன் உலகம் முழுவதும் பயணம் செய்தபோது, அறிவியல் உலகம் அவரை இருகைகளேந்தி வரவேற்று மகிழ்ந்தது,