பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

11


தமிழர்கள் திருக்குறளை மறந்தது உண்மைதான்-அதனை அனைத்துலகிற்கும் அறிமுகப் படுத்த அவர்கள் மறந்தது உண்மைதான். ஆனால், திருக்குறள் தமிழர்களை மறக்கலில்லை. அவர்களை அனைத்துலகிற்கும் அறிமுகஞ் செய்து வைக்க அது மறக்க வில்லை. தன் கருத்தின் திண்மையால் உலக மக்களைக் கவர்ந்ததன் வாயிலாக, 'திருக்குறள் என ஒரு நூலுண்டு, அஃது எழுதப்பட்டது தமிழ் மொழியில், அம்மொழியினைப்பேசுபவர் தமிழர்கள், அவர்கள் அத்தகையதொரு நூலை உலகிற்கு அளிக்க வல்ல ஆற்றலும் அனுபவமும் நிரம்பியவர்கள்' என அனைத் துலகினரும் அறிந்து வியக்கச் செய்தது நம் அருமைத் திருக் குறளன்றோ?

உலகிற்கு அறிமுகஞ் செய்து பரப்புவது அப்புறம் இருக்கட்டும், முதலில் நீங்கள் படியுங்கள்! என்று திருத் குறள் சொல்லுவது போல்-திருவள்ளுவர் சொல்வது போல் தோன்ற வில்லையா?

திருக்குறளை ஒரு முறை படித்தால் போதுமா? இரு முறை படித்தால் போதுமா? ஒரு கருத்துரையைக் கற்றால் போதுமா? ஒரு குறிப்புரையைக் கற்றால் போதுமா? திருக்குறளோ ஒரு வாழ்க்கை நூல்-வாழ்க்கைத் துணை நூல். இளமையில் ஒரு முறை படித்துச் சுவைத்தோம். இன்னும் இல்லாண்டுகள் சென்ற பின்னர்-சில அனுபவங்களைப் பெற்ற பின்பு திருக்குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தால் தெரியும். புது அழகு-புது நயம்-புதுப்பொலிவு காணப்படும். இவ்வாறே ஆண்டுகளுக்கு ஆண்டு, அனுபவத் துக்கு அனுபவம் திருக்குறள் தெவிட்டாது இனிக்கும், 'உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி' என மாங்குடி மருதனாரும், 'முப்பால் ஆய்தொறும் ஊறும் அறிவு' என உருத்திரசன்மகண்ணரும் உரைத்திருப்பதை இப்போது ஒருமுறை ஊன்றி நோக்குக.