பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

ஆழ்கடலில்


(5) திருவள்ளுவர் திருக்குறளைத் தாமாகவே, சொந்த அறிவு அனுபவங்களின் துணைகொண்டே செய்தார். (7.நக்கீரனார்.)

(6) திருக்குறளில் முதலிலுள்ள பாயிரம் என்னும் பகுதிதான் வீட்டுப்பால் (20.சிறு மேதாவியார்.)

(7) நான்கையும் இன்பம் (காமம்), பொருள், அறம், வீடு என்னும் முறையில் வரிசைப்படுத்தியமைத்தல். (33-நரிவெரூஉத்தலையார்.)

(8) பொருட்பால் ஏழு பிரிவுகளையுடையது. (22-தொடித்தலை விழுத்தண்டினார், 26-போக்கியார்.) ஆனால், உரையாசிரியர்களுள் மணக்குடவர் ஆறு பிரிவாகவும், பரிமேலழகர் மூன்று பிரிவாகவும் பிரித்துக்கொண்டுள்ளனர். பிரிவு இயல்களின் பெயர்களும் ஒருவர்க்கொருவர் வேறுபடுகின்றன.

(9) காமத்துப்பால் மூன்று பிரிவுகளையுடையது, (22-தொடித்தலை விழுத்தண்டினார், 27-மோசிகீரனார்.) ஆனால், உரையாசிரியர்கள் இருவரும் இரண்டாகப் பிரித்துள்ளனர். பிரிவுகளின் பெயர்களும் வெவ்வேறானவை.

இவ்வாறு இன்னும் மாறுபட்ட பல்வேறு வகைக் கருத்துகளைப் பழைய புலவர்கள் வெளியிட்டுள்ளனர். இதனால் தெரிவது என்ன? திருவள்ளுவரால் எழுதிப் போட்டுவிடப் பட்டுப்போன திருக்குறள் ஒரு நேரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறது. அதன் அமைப்பு முறையில் பலரும் தத்தம் கைவண்ணங்காட்டியிருக்கின்றனர். என்பது வரையும் நன்கு புரிகின்றதன்றோ?

பால்களின் அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? பாலின் உட்பிரிவாகிய இயல்களின் அமைப்பில் மட்டுந்தானா