பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

ஆழ்கடலில்


எமனைப் பார்த்தேன்

(தெளிவுரை) உலகில் 'எமன் எமன்' என்று பலரும் சொல்லக் காதால் கேட்டிருக்கிறேனே தவிர, அந்த எமனை இதற்கு முன்பு நேரில் கண்டதில்லை; ஆனால், பெண் தன்மையோடும் போரிடும் பெரிய கண்களோடும் அந்த எமன் என் எதிரில் நிற்பதை இதோ நேரில் காண்கிறேன்.

"பண்டறியேன் கூற்றென் பதலை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு"

(பதவுரை) கூற்று என்பதனை = எமன் என்று சொல்லப் படுவதை, பண்டு அறியேன் = முன்பு பார்த்தறியேன்; (ஆனால் அது) பெண்தகையால் = பெண் தன்மையோடு, பேர் அமர் கட்டு = பெரிய போர் செய்கின்ற கண்களையும் உடையது என்பதை, இனி அறிந்தேன் = இப்போது (நேரில் பார்த்து) அறிந்து கொண்டேன். (கூற்று = எமன்; இனி = இப்பொழுது, பெண்தகை = பெண் தன்மை; அமர் = போர்; கட்டு (கண் + டு) = கண்களை உடையது.)

(மண- உரை) பண்டு கூற்றின் வடிவு இன்ன பெற்றித் தென்பதை அறியேன்; இப்பொழுது அறிந்தேன்: அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து.

(பரி-உரை) கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டறிவதல்லது கண்டறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண்டகையுடன் பெரியவாய் அமர்த்த கண்களை யுடைத்து.

(விரிவுரை} கூற்று - கூற்றுவன் என்றால் எமன், எமனது வேலை, உடல் வேறு உயிர் வேறாகக் கூறு போடுதல் அதாவது கொல்லுதல் என்றும், அவனது அலுவலகம் (ஆபீசு) தென்திசையில் இருக்கிறதென்றும் கூறுகின்றனர்.