பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

ஆழ்கடலில்



இவர்களுக்கு என்ன செய்யவேண்டுமோ? ஒன்றும் புரியவில்லை. ஏனைய தெய்வங்களைப் போலவே இவர்களும் அருள் புரிகின்றார்கள் என்றால், இவர்களையும் தெய்வக்கூட்டத்துள் சேர்த்துவிடுவதால் என்ன இடையூறு? எனவே இப்பொருள் பொருத்தம் அன்று.

மேலும், இப்பொருள் உரைத்தால், யான் உரைத்தபடி முன்னோரின் நினைவு விழாவிற்கு இடமில்லாமலேயே போய்விடும். இறந்துபோன வீரர் முதலியவர்களுக்கு விழாக் கொண்டாட வேண்டாவா? கொண்டாடியதாகக் கூறுகின்றனவே சங்க கால இலக்கண இலக்கியங்கள்! வீர மங்கை கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானே ஒரு தனித் தமிழ் மன்னனாம் சேரன் செங்குட்டுவன். சிலப்பதிகாரத்திற்குள் சென்று பார்த்தால் தெரியும். எனவே, தென் புலத்தார் என்பதற்கு, சிறந்த செயல்கள் செய்து சென்று பட்ட முன்னோர் எனப் பொருள் கூறலே சாலப் பொருந்தும்.

காமத்துப்பால்
களவியல் - தகையணங்குறுத்தல்
உயிர் உண்ணும் தோற்றம்

(தெளிவுரை) பெண் தன்மையுடைய இப்பேதைக்குக் கண்கள், கண்ணுக்குரிய கண்ணோட்டம் இன்றி, எதிர்மாறாக, பார்த்தவரது உயிரைத் தொலைக்கும் பார்வையுடையனவாய் உள்ளன.

“கண்டா ருயிருண்ணுங் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன எண்”