பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

61


பெருந் தூக்கமே! எனவே, இனியேனும் தமிழர்கள் உறக்கத்தினின்று விழித்தெழுவார்களாக!

அடுத்து, ஆள்பவனுக்குக் 'கல்வி' வேண்டும். எல்லோருக்குமே கட்டாயக்கல்வி வற்புறுத்தப்படுகின்ற இக்காலத்தில், அரசனுக்குக் கல்வி வேண்டும் என்பதைப் பற்றி அவ்வளவாகப் பேச வேண்டியதில்லை. பழந்தமிழ் மன்னர் பலர் பல்கலைப் புலவர்களாகத் திகழ்ந்தமையைப் பழைய நூல்களே பறைசாற்றுகின்றன அல்லவா? இக்காலத்தில் அரசாள்பவர் எந்தக் கல்வி பெறாவிடினும் அரசியல் கல்வியாவது பெறுவார்களாக! வள்ளுவரின் பொருட்பாலைப் படித்தால்கூடப் போதுமே!

அடுத்தபடியாக, ஆள்பவனுக்குத் 'துணிவுடைமை' வேண்டும். துணிவு என்பதற்கு தைரியம் என்றும், துணிதல் அதாவது தீர்மானித்து ஓர் உறுதியான முடிவுக்கு வருதல் என்றும் இரு பொருள் கூறலாம். இவ்விரண்டு கருத்துக்களுமே ஏறக்குறைய ஒன்றோடொன்று தொடர்புடையனவே! தைரியம் உடையவன் தானே எதிலும் திட்ட, வட்டமான, ஒரு முடிவுக்கு விரைந்து வருவான்? இல்லாதவன். வெண்டைக்காய் போல் 'வழ வழா' 'குழ குழா' என்று வளர்த்திக் குட்டை. குழப்புவான். இப்படியிருந்தால் அரசாங்கத்தில் எந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும்? தீர்மானத்தை ஒத்திப்போட்டபடியே போகவேண்டியது தான். அப்புறம் நாடு, நட்டாற்றில் அவிழ்த்து விட்ட கட்டுமரந்தான்! இப்போது புரியுமே இக்குறட் கருத்து !

மானமுடையது அரசு

(தெளிவுரை) அறநெறி வழுவாமலும், தீமைகளைக் களைந்தும், வீரங்குன்றாதும் மானத்துடன் விளங்குபவனே அரசன்,