பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

65



கொண்டு போய்விட்டதால், அம் முதுகுப் புண்ணுக்கு நாணி, பெருஞ்சேரலாதன் என்னும் சேரமன்னன் உண்ணா நோன்புற்று உயிர் விட்டான். இன்னும் என்ன சொல்ல வேண்டும்?

அறத்துப்பால்


இல்லறவியல் - இல்வாழ்க்கை

வழி எஞ்சல் இல்

“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.”

(பதவுரை) வாழ்க்கை = (ஒருவனுடைய) இல்வாழ்க்கையானது, பழி அஞ்சி = (பொருள் தேடுதல் முதலியவற்றில் உண்டாகும்) பழிக்கு அச்சப்பட்டு, பாத்து = (அப்படி நல்ல வழியில் வந்த செல்வப்பயனைப் பலர்க்கும்) பகுத்துக் கொடுத்து, ஊண் = (தானும்) உண்ணுதலை, உடைத்தாயின் = உடையதாக இருக்குமேயானால், வழி = (அந்நல்வாழ்க்கையின்) தொடர்ச்சி, எஞ்சல் = அற்றுப் போதல், எஞ்ஞான்றும் இல் = எப்பொழுதும் இல்லை. (பாத்தல் = பகுத்தல்; எஞ்சுதல் = அற்றொழிதல்)

(மண-உரை) இல்வாழ்க்கையாகிய நிலை பழியையும் அஞ்சிப் பகுத்துண்டலையும் உடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத்தினும் இல்லை.

(பரி-உரை) பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான்