பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

83


பேசாமையால் ஊமையர்) என்ற குசேலோபாக்கியானப் பாடலும்,

பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடின்
உருத்தெரி யாமலே ஒளி மழுங்கிடும்
மருத்து உளவோ எனில் வாகடத்திலை
தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே"

என்ற தனிப்பாடலும் எழுந்தனபோலும். ஆனால் இக்குறள் எழுந்தது, நாட்டு மக்களின் தலையெழுத்தை விதிக்கின்ற நாட்டுத் தலைவனுக்காகவேயாம். மேலும் இக்குறள் எழுந்தது இந்தக் குடியரசுக் காலத்தில் அன்று; எல்லாம் வல்ல முடியரசன் காலத்தில். அங்ஙனமெனில் இக்காலை எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

வேந்தன் எளியவனாய் இருக்க வேண்டும் என்றால் இளித்தவாயனாய் இருக்கவேண்டும் என்பதன்று; கடுகடுப்பு சிடுசிடுப்பு, வீரம் - வேகம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவேண்டும்; தன்னை நாடியவரிடம் இருக்கக்கூடாது. அதியமான் என்னும் அரசனை ஒளவையார் பாடியுள்ளார். 'யானைப்பொம்மையுடன் விளையாடுவதைப் போலச் சிறுவர்கள் தன்னுடன் விளையாடித் தன் கொம்புகளை நீரில் கழுவுமளவிற்குக் காட்டி நிற்கும் ஒரு பெரிய யானையைப்போல, அதியமான் தன்னைச் சேர்ந்தோரிடம் இனிமையாய்ப் பழகுவானாம்; அந்த யானை மதம் பிடித்துத் திரிந்தாற்போலத் தன் பகைவரிடம் நடந்து கொள்வானாம்' என்பது ஒளவையார் பாடலின் கருத்து. இதனை,

ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும் எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே