பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

ஆழ்வார்களின் ஆரா அமுது


இப் பாண்பெருமாள் போன்ற பேரடியார்களைத் திரு வுளத்திற் கொண்டே தொண்டரடிப்பொடிகள், இழிகுலத் தவர்களேனும் எம்.அடி பார்கள் ஆகில் ...நின்னொகும் ஒக்க வழிபட அருளி னாய்போல் என்றும்: நூமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும் என்றும் குறிப்பிட்டதாகக் கருதலாம். இங்ங்ணம் ஞான பக்தி வைராக்கியமுடைய இந்த ஆழ்வார்: குளித்துமூன் றணலை ஒம்பும் குறிகொள்.அந் தனமைக்" குரிய பெருநிலையை அடைகின்றார் என்பது ஈண்டு உளங் கொள்ளத்தக்கது. இன்றும் திருப்பாணர் - பாண்பெருமாள் - பாணர்குல விளக்காகத் தமது திருவாக்கில் நம்மிடையே வாழ்கின்றார். காட்டவே கண்ட பாத கமலகல் ஆடை உந்தி தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய் வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபு குந்து பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவி னோமே89 28. திருமாலை - 42, 43. 29. டிெ . 25 30. தனியன்