இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5.நாடும் மக்களும் நலம் பெற
108
எல்லையற்ற சுவையே - எனை நீ
என்றும் வாழ வைப்பாய்
என்று பாரதி பாடுகிறார். இன்னும்
நாடு மணிச் செல்வமெல்லாம்
நன் கருள் வாய் திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங்களியே திருவே!
என்றும்
நீறுபடக் கொடும்பாவம் பிணி பசி
யாவையும் - இங்கு
நீக்கி அடியரை நித்தமும் காத்திடும்
வேலவா
என்றும் பாடுகிறார்.
கட்டுகள் போக்கி விடுதலை தந்திடும்
கண்மணி போன்றவனை - எம்மைக்
காவல் புரிபவனை - தொல்லைக்
காட்டையழிப்பவனைத் - திசை
எட்டும் புகழ் வளர்ந்தோங்கிட வித்தைகள்
யாவும் பழகிடவே - புவி மிசை இன்பம்
பெருகிடவே - பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம் - வாரீர்
என்று பாடுகிறார்