ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 203
மங்களக்கைகள் மகாசக்தி வாசம்
வயிறாலிலை இடை அமிர்தவீடு
"சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்
தாமரையிருந்தால் லகூகிமி பீடம்,
“பொங்கித்ததும் பித்திசையெங்கும் பாயும்
புத்தன்பும் ஞாலமும் மெய்த்திருக் கோலம்
எங்கள் கண்ணம்மா என்றெல்லாம் பாடுகிறார்.
பீடத்தில் ஏறிக் கொண்டாள் - மனப்
பீடத்தில் ஏறிக் கொண்டாள் கண்ணம்மா
என்று பாடுகிறார்.
“நின்னையேரதி யென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா என்றும் தன்னையே சகியென்று சரணமெய்தினேன் எனவும்
பாடுகிறார். கண்ணம்மா, கண்ணம்மா என்றும் குறிப்பிடும் பாரதியின் பாடல்கள் நெஞ்சை நெகிழ்விப்பனவாகும்.
“காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் எனத் தொடங்கும் அருமையானதொரு இனிய பாடல் நம்மை மயக்குவதாகும். நமது உள்ளத்தை உருக்குவதாகும். பாரதியின் பெயரையும் புகழையும் நாடெங்கும் உலகெங்கும் பரப்புவதாகும்.
காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமு
துற்றினையொத்த இதழ்களும் - நில