ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 271
“வெண்ணிலவு நீயெனக்கு! மேவுகடல் நான்உனக்கு!
பண்ணுகதி நீயெனக்கு ! பாட்டினிமை நானுனக்கு !
எண்ணி எண்ணிப்பார்த்திடில் ஒர் எண்ணமில்லை,
நின்சுவைக்கே !
கண்ணின் மணிபோன்றவளே கட்டியமுதே கண்ணம்மா!
“வீசுகமழ் நீயெனக்கு விரியுமலர் நானுனக்கு !
பேசுபொருள் நீயெனக்கு பேனுமொழி நானுனக்கு!
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்!
"ஆசைமதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீயெனக்கு, காந்தமடி நான் உனக்கு !
வேதமடி நீயெனக்கு, வித்தையடி. நானுனக்கு !
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே! நல்லவுயிரே கண்ணம்மா!
“நல்லஉயிர் நீயெனக்கு நாடியடி நானுனக்கு!
செல்வமடி நீயெனக்கு சேமநிதி நானுனக்கு !
எல்லையற்ற பேரழகே! எங்கு நிறைபொற்சுடரே
முல்லைநிகர் புன்னகையாய் மோதுமின்பமே !
கண்ணம்மா!
“தாரையடி நீஎனக்கு தண்மதியம் நானுனக்கு!
வீரமடி நீயெனக்கு ! வெற்றியடி நானுனக்கு !
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கு மின்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைத்தாய் உள்ளமுதே! கண்ணம்மா!