இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 279
சோதிக்கு சோதியப்பா - என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்
மாதிக்க வெளியினிலே - நடு
வானத்தில் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய் - கண்ணா
சுடர்ப் பொருளே பேரடற் பொருளே !
“கம்பத்தில் உள்ளானோ - அடா
காட்டுன்றன் கடவுளைத் துணிடத்தே
வம்புரை செயுமூடா என்று
மகன்மிசை யுறுமியத் துணுதைத்தான்
செம்பவிர் குழல் உடையான் - அந்தத்
தீயவல்லிரணியனுடல் பிளந்தாய்
நம்பி நின்னடி தொழுதேன் - என்னை
நானழியாதிங்கு காத்தருள்வாய்”
“வாக்கினக் கீசனையும் - நின்றன்
வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்
ஆக்கினைக் கரத்துடையாய் - என்றன்
அன்புடையெந்தை, என்னருட் கடலே
நோக்கினிற் கதிருடையாய் - இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த் தருள்வாய்
தேக்கு நல்வானமுதே - இங்கு
சிற்றிடையாய்ச்சியில் வெண்ணெய் உண்டாய்,