பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. флотšifusovu upiti 291

ஆய்வு அறிக்கை சமர்ப்பித்தல்

வளர்முக நாடுகளில் இளம் தொழிலாளர்களுக்கு மறுக்கப் பட்டுள்ள வாய்ப்புகள் என்னும் தலைப்பிலும், மற்றும் இளம் தொழிலாளர்களின் பொதுப் பிரச்சனைகள் பற்றியும், உலக தொழிற் சங்க சம்மேளத்தின் சார்பில் பல்கேரிய நாட்டில் வார்னா நகரில் நடைபெற்ற சர்வ தேசத் தொழிலாளர் மகாநாட்டில் இந்தியத் தொழிலாளர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அம் மாநாட்டில் இந்திய நாட்டின் இளம் தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றிய அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை உலகத் தொழிலாளர் சம்மேளத்தின் ஆவணங்களின் பகுதியாகச் சேர்க்கப் பட்டிருக்கிறது.

1980-ம் ஆண்டுகளில் உலக தொழிற் சங்க சம்மேளமும், சமாதானம் மற்றும் சோஷலிஸம் பற்றிய பிரச்னைகளும் என்னும் சர்வதேச இதழும் சேர்ந்து நடத்திய கருத்தரங்கில் வளர்முக நாடுகளில் பொதுத்துறையின் பங்கும் பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் இடையிலான உறவு தொடர்புகள் பற்றிய பிரச்னைகள் பற்றி டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.அ.சீனிவாசன் இந்தியாவில் பொதுத்துறைக்கும் தனியார் துறையில் உள்ள நடுத்தர மற்றும் சிறு தொழில்களுக்கும் இடையிலான உறவு என்னும் தலைப்பில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்து, அது உலக தொழிற் சங்க ஆவணத்தில் பதிவாகியுள்ளது.

பத்திரிகையாளராக

தொழிற் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் தொழிற் சங்கச் செய்தி ஹார்பர் தொழிலாளி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் பொறுப்பில் பணியாற்றியுள்ளார். கட்சியின் மாநிலத் துணைத் செயலாளராக இருந்த போது கட்சியின் மாநில அமைப்பு நிலைப் பொறுப்பில் இருந்த காலத்தில் கட்சியின் பத்திரிகையான ஜன சக்தி வார இதழ் மற்றும் நாளிதழ்களில் தலைமை ஆசிரியராக