பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும்

நூலாசிரியர் : அ.சீனிவாசன்

பதிப்புரை

ஆழ்வார்களும் பாரதியும் என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் ஒரு புதிய முயற்சியாகும். இது ஒரு சிறந்த முயற்சியுமாகும்.

ஆழ்வார்களுடைய பாடல்களையும், பாரதியின் பல வேறு பாடல்களையும் சிறந்த முறையில் எடுத்துக் காட்டி இந்த நூலில் ஆசிரியர் நன்கு ஆய்வு செய்து இணைத்துக் காட்டியுள்ளார்.

இந்து நூலில் தெய்வ பக்தியும், தேச பக்தியும் இணைத்துக் காட்டப் பட்டிருக்கிறது. இந்து தர்மத்தின் லோக க்ஷேமம் (உலக நன்மை) என்னும் தலை சிறந்த கருத்து இந்த நூலில் சிறப்பாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது

கண்ணன் பெருமை இந்த நூலில் மிகவும் சிறப்பாகவும் விரிவு படவும் விளக்கிக் கூறப்பட்டிருக்கிறது. கண்ணன் மானிட வடிவில் வந்து ஆற்றிய அருஞ் செயல்கள், அவனுடைய உலகப் பெருவடிவம் நமது கண்முன் நிற்கும் படியாக சிறப்பாக எடுத்துக் கூறப் பட்டிருக்கிறது.

இந்த நூலின் கையெழுத்துப் பிரதியை முழுமையாகப் படித்து : திருத்தி உதவிய திருமதி பகீரதி பி.ஏ.,பி.எட்.எம்.ஏ. தமிழ்

அவர்களுக்கும், சிறந்த முறையில் அச்சிட்டுக் கொடுத்து உதவிய அச்சகத்தாருக்கும் எங்கள் நன்றி உரித்தாகுக.

திரு.அ.சீனிவாசன் எழுதிய முந்திய நூல்களுக்கு சிறந்த முறையில் ஆதரித்தவர்கள் இந்த நூலுக்கும் தங்கள் ஆதரவினை நல்குமாறு வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம்.

பதிப்பகத்தார்.