பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

ஆழ்வார்கள் காலநிலை

முதலாம் அதிகாரம்

முன்னுரை

இன்று பிரசங்கிக்கும்படி இச்சங்கத்தாரால் எனக்கு நியமிக்கப்பெற்ற பொருளுரை “ஆழ்வார்கள் காலநிலை” என்பது. அவதார புருஷர்களும் ஞானபரி பூரணர்களுமான பழைய திருமாலடியார்களைப் பற்றிப் பேசும்படி நான் நியமிக்கப்பெற்றது எனது பெரும் பேறே யாகும். அப்பேற்றை நான் பெறினும் அப்பெரியோர்களுடைய மாட்சிகளை அறிஞர்களான நீங்கள் மதிக்கும்படி எடுத்துரைக்கக்கூடிய திறமை என்னிடஞ் சிறிதுமில்லை. ஆயினும், உங்கள் நியமனப்படி நான் கூறப்புகும் சிறுவார்த்தைகளும் அப்பெரியாரைப் பற்றியனவேயாதலால், எவ்வகையினும் நீங்கள் அவற்றை விருப்பாய் ஏற்றுக் கொள்வீர்களென்ற உறுதியுடன் தெரிந்த சிலவற்றைக் கூறத் தொடங்குகின்றேன்.

இன்று எடுத்துக்கூறப்புகும் ‘ஆழ்வார்கள் கால நிலை’ என்ற விஷயத்தில், அவர்கள் வாழ்ந்த காலங்கள்