இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விண்மீன் இயங்கும் வழிகள் கண்டான்
விரியும் எண்ண விளிம்பைத் தொட்டான்
மண்ணில் தான்தன் மனத்துள் ஐயோ
மணக்கும் அன்பின் வழியை மறந்தான்.
வாழ்வு பெருக்கும் ஊதியத்தை
வளமை சுருக்கும் இழப்பை அறியாத்
தாழ்வு நிலையில் அறிவின் வலையில்
தன்னை இழந்து சிக்கிக்கொண்டான்.
சூழ்ஞா யிற்றின் கதிரைப் பிடித்துச்
சூழ்ச்சிச் சிறையில் அடைக்கும் மாந்தன்
வாழ்க்கை இரவின் இருளைப் போக்க
வகையற் றன்பின் ஒளியற்றுளனே.
102