இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வேட்கை
ஆற்றின் வரம்பை விட்டே
அடித்து முடித்தே ஓடிக்
காற்றின் அலையால் துடிக்கும்
கரைகொள் கடலை வேட்பேன்.
கடலின் பரப்பை விட்டுக்
கணமும் பிரிதல் ஆற்றேன்
உடலைப் பிரிந்து வாழும்
உயிரை இழக்க ஒப்பேன்.
103