பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 "அக நிலையையும் ஆற்றலையும் பற்றிய எத்தனையோவித ரகசியங்களை நன்கறிந்தவன் இந்த மனிதன்; தர்க்கத்தையும், தத்துவத்தையும் நன்கறிந்தவனும் இந்த மனிதன்தான்" என்று இறைவன் கூறுவதாக இக்பால் கூறுகிறாா். அடியார்களையும், இறைவனுடன் சமநிலையில் வைத்துவிட்ட மானிடனை இறைவன் வியந்து பாராட்டுகிறார் என்று இக்பால் பாடுகிறாா். மனிதன் பால் இக்பால் கொண்டிருந்த மதிப்பும், நம்பிக்கையும் தான் எத்தகையது!

பழம் பெருமையைப் பேசிக்கொண்டு வெறியூட்டி அலையும் கூட்டத்தினரை "மூதாதையரின் புதை குழிகளை விற்றுச் சாப்பிடுவோர்" என்று இக்பால் சாடுகிறார். புதியன கண்டு பிடித்தல், இலக்கிய ஆராய்ச்சி, மூதாதையினருக்கு இழிவு வராமல் பாதுகாத்தல் ஆகியவற்றை விட்டு நம்பிக்கை இழந்து தோல்வி மனப்பான்மையுடன் 'நாளை, நாளை' என எதிர்பார்த்திருக்கும் செயலற்ற சோம்பேறிகளை இக்பால் வெறுத்தார். -

"நோன்பின் துன்பங்களைச் சகித்து, இறைவனை மனமார நேசித்து, திமிர்பிடித்த பணக்கார சாதியின் குற்றங்குறைகளை மறைத்து அவர்களுடைய மானத்தைக் காக்கும் ஏழைகளால் தான், உழைக்கும் மக்களால்தான் உலகில் அறம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது” என்று இக்பால் பாடினாா். மிகக் சிறந்த எழுமீன் கூட்டம் போன்ற உயர்ச்சியை மனிதன் தனது இருப்பிடமாக்கிக்கொள்ள வேண்டுமென்று இக்பால் விரும்பினார்.

மகாகவி இக்பால், தாம் வாழ்ந்த காலத்தில் இவ்வுலகின் மேற்கிலும், கிழக்கிலும் நடைபெற்ற மகத்தான மாறுதல்களை மிக நுணுக்கமாகப் பரிசீலித்து வந்தார். சோவியத் ருஷ்யாவின் மகத்தான தோற்றத்தையும் அது உணர்த்தும் மாபெரும் உண்மைகளையும் நன்கறிந்தவர் இக்பால். சோவியத் நாட்டில் புதியதொரு சமுதாயம் மலர்ச்சி பெற்று வருவதை அவர் மிக

                               16