பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 துரதிஷ்டம் மிக்க தொழிலாளியின் நிலையோ படுமோசம். மிக மோசம்! முதலாளித்துவப் படகு மோதிச் சிதறுவது எப்போது? உனது உலகம் காத்திருக்கின்றது; கணக்குத் தீர்க்கும் நாளை மீட்சி பெறும் நாளை எதிர்நோக்கி-பொறுமையிழந்து காத்திருக்கின்றது.”

தேவகன்னியர் சாட்சியம்

இலெனினது தெளிவான, நேருக்கு நேரான படுசுரீரெனத் தைக்கும் இச் சொற்கள் தேவகன்னிகளை உருக்கி விடுகிறது. அவர்கள் சேர்ந்து பாடுகின்றனர். இறைவனுடைய உலகின் நிலையை அவர்கள் விளக்குகின்றனர்.

“நல்லறிவு இன்னும் கட்டுப்பட்டே இருக்கிறது. அன்பும் அருளும் நிலைபெறவில்லை. ஒ, தெய்வீக ஓவியனே, (இறைவா) உனது ஓவியம் மறைவிடத்தே கேட்பாரற்றுக் கிடக்கின்றது. கேளிக்கைக்காரனும் உன் பெயரால் எத்திப் பிழைப்பவனும், தலைவன் என்போனும், சந்நியாசியும் உலவியே வருகின்றனர். உனது பிரபஞ்சத்தில் சமரச நிலையைக் காணோம். ஏற்றத்தாழ்வுகள் மலிந்த பழைய ஏற்பாடு இன்னும் நீடித்தே வருகிறது.”

இறைவன் கட்டளை

தேவகன்னிகளின் இப் பாடல் சர்வேசுவரனைக் கிளர்ச்சியடையச் செய்கிறது. ஆழ்ந்த குரலில், காம்பீர்யம் மிக்க உறுதியுடன் அவர் பேசுகிறார். பாடுபட்டுப் பயிர் வளர்த்துக் காத்து அறுவடை செய்பவனுக்குப் பயன்படாத தானிய மணிகள் அனைத்துக்கும் நெருப்பிடுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணை இடுகிறாா்.

"எனது உலகின் ஏழை எளியோரைத் தட்டி எழுப்புவீராக! ஆதிக்கக்காரர்களுடைய அரண்மனைகளின் அஸ்திவாரங்களை உலுக்கிச் சிதையுங்கள். அடிமைகளின் ரத்தத்தில்

                            19