பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



               என்னுடைய பாட்டு
               இளமையும் அன்பும் 
               இணைந்தினிக்கும்; நெஞ்சில் 
               வளமையும் வன்மையும் 
               சேர்க்கும்; கிளர்ந்தெழுச்சி 
               ஊட்டும்; உணர்ச்சியால் 
               உள்ளத்தை வான்ஏற்றும் 
               பாட்டா; என்னுடைய
               பாட்டு!
               அன்பினைப் பாடும் என் 
               பாடல்களை உண்டெறியும் 
               என்பினைப்போல் விட்டெறிதல் 
               ஏன்? அவற்றுள் தென்புடைய 
               பேரறிஞர் தன்மையினைப் 
               பேரறிஞர் பீடதனை
               ஓரணியாய்க் காண்பீர்
               உவந்து!


                                 21