இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்னுடைய பாட்டு
இளமையும் அன்பும் இணைந்தினிக்கும்; நெஞ்சில் வளமையும் வன்மையும் சேர்க்கும்; கிளர்ந்தெழுச்சி ஊட்டும்; உணர்ச்சியால் உள்ளத்தை வான்ஏற்றும் பாட்டா; என்னுடைய பாட்டு!
அன்பினைப் பாடும் என் பாடல்களை உண்டெறியும் என்பினைப்போல் விட்டெறிதல் ஏன்? அவற்றுள் தென்புடைய பேரறிஞர் தன்மையினைப் பேரறிஞர் பீடதனை ஓரணியாய்க் காண்பீர் உவந்து!
21