இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நான் யார் ?
தெய்வவெறி கொண்டஇப் பாவலன் தோழரே, கிழக்கையோ மேற்கையோ சேர்ந்திட்ட ஒருவன் அல்லேன்; மெய்என்று உணர்ந்ததை வையத்திற் குரைக்கிறேன் மேன்மையாய்ப் புகழும்எந் நாட்டையும் சேர்ந்தேனலேன்; பொய்வந்த மதவாணர் புரட்டினில் சிக்கிலேன்; புதுநா ரிகத்தினுள் புகுந்துநுனிக் கொம்பேறிலேன்; கைவந்த நண்பரும் காணாத பகைவரும் காதலித் துவப்பதில்லை, கருத்தொன்று படுவதிலைஏன்? நெய்வந்த தேனையும், நேர்எதிர் நஞ்சையும் நிறையையும் குறையையும் பகுத்தறிந்து உணர்பவன் நான்! மெய்யினை அறிபவன் உண்மையை உணர்பவன் மேவு குப்பைமேட்டினை மேரு எனக்கொள்கிலேனே. 22