இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தனிமை
என்றன் நெஞ்சு கடந்த மாலையைக் கருதுகின்றது; என்றன் கண்கள் வருநாள் விடியலை வழிபார்த்துள்ளன; மக்களிடையில் நான் தனித்து வாழ்வேன். வீட்டில் சுடரா விளக்கு தனிமையில் எரிந்தே இனிமை பெற்றிடுமா? என்னை விரும்பிட வீட்டில் எவருமே இல்லையா? கழனியில் எழுந்த செங்கழுநீர் மலர்நான், தனிமை யானவன், ஆண்டவ, அருளினை அருளுக, பரிவுகொள், பண்புடை நண்பினை அன்புடன் தருகவே.
இ-2